ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலின் முடிவு
இன்னும் முழுமையாக வெளியாக வில்லை. வாக்கு எண்ணிக்கையில் வெ.வெளியாகி உள்ள
முன்னணி நிலவரத்தை வைத்து பார்த்தல், ஜே.எம்.எம். மாபெரும் கூட்டணி
பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் வெற்றி பெற இருப்பதால், ஹேமந்த் சோரன்
முதல்வராக பதவியேற்க உள்ளார். ஜார்க்கண்ட் தேர்தலில் முக்தி மோர்ச்சா கட்சி
முதல் முறையாக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இவர் போட்டியிட்ட
இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
ஹேமந்த்
சோரன் பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகங்களுடன் பேசினார், அப்பொழுது அவர்,
"பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த மாநில மக்கள் தெளிவான ஆணையை
வழங்கியுள்ளனர்.
எனவே நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். இந்த மாநில மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய நாள் இது.
இந்த
வெற்றி ஷிபு சோரனின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாகும்
கிடைத்தது என்று கூறினார். இந்த அரசு எந்த நோக்கத்திற்காக
உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.
கிராண்ட்
அலையன்ஸ் ஒன்றாக தேர்தல்களை எதிர்த்துப் போராடியதாகவும், இதன் விளைவாக
முன்னால் இருப்பதாகவும் ஹேமந்த் சோரன் கூறினார். இந்த வெற்றியில் எங்களுடன்
சம்பந்தப்பட்ட காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி.க்கான அனைத்து நிர்வாகிகளும்,
லாலு ஜி, சோனியா ஜி மற்றும் ராகுல் ஜி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க
விரும்புகிறேன் என்றார்.
மேலும் பேசிய அவர், இன்று மாநிலத்திற்கு
ஒரு புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. எந்த நம்பிக்கையில் மக்கள் தங்கள்
வாக்குகளை எங்களுக்கு அளித்தார்களோ, அவர்களின் நம்பிக்கையை நிச்சயமாக
காப்பாற்றுவேன் என உறுதியளிக்கிறேன். அவர்கள் எந்த வர்க்கம், சமூகம் அல்லது
விவசாயி, பெண் மற்றும் பத்திரிகையாளராக இருந்தாலும் அவர்களின் நம்பிகையை
உடைக்க மாட்டோம். சாதி மத இன வேறுபாடின்றி அனைவருக்காகவும் பாடுபடப்
போவதாகவும் ஹேமந்த் சோரன் கூறினார்.
தற்போதைய நிலவரப்படி, பாஜக 25,
ஜேஎம்எம் 30, காங்கிரஸ் 15, ஆர்ஜேடி 1, ஜேவிஎம் 3 மற்றும் ஏஜேஎஸ்யு 3
இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம்.
உங்களுக்கு
சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து
விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது
ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

No comments:
Post a Comment