Latest News

விமானம் தாங்கிக் கப்பலை ரிப்பேர் பார்க்கலாம்! இந்தியா கட்டியுள்ள 'ட்ரை டாக்' பற்றித் தெரியுமா?

மும்பை மஜ்கான் கப்பல் கட்டும் தளத்தில், இந்திய கடற்படைக் கப்பல்கள் கட்டப்பட்டுவருகின்றன. இங்கு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 3 ட்ரை டாக்குகள் (கப்பல் பராமரிப்புக் கூடம்) உள்ளன. கார்களை எப்படிப் பழுதுபார்க்கிறோமோ, அதேபோல ட்ரை டாக்குகளில் கப்பல்களைப் பழுதுபார்க்க முடியும். ஏற்கெனவே உள்ள ட்ரை டாக்குகளில் விக்கிரமாதித்யா போன்ற விமானம்தாங்கிக் கப்பலை நிறுத்திப் பழுதுபார்க்க முடியாது.
ட்ரை டாக்
தற்போது, மும்பை மஜ்கானில் பிரமாண்டமான ட்ரை டாக் கட்டப்பட்டுள்ளது. இதற்கு, ரூ.1,000 கோடி செலவாகியுள்ளது. 281 மீட்டர் நீளத்தில் 45 மீட்டர் அகலத்தில் 17 மீட்டர் ஆழம் கொண்ட ட்ரை டாக் இது. விக்கிரமாதித்யா போன்ற விமானம்தாங்கிக் கப்பலைக்கூட இங்கே பழுது பார்க்க முடியும்.
இந்தியக் கடற்படையின் முதல் ட்ரை டாக் இது. கடந்த 9 ஆண்டுகளாகக் கட்டப்பட்டுவந்த, இந்த ட்ரை டாக் அமைக்கப் பயன்படுத்தப்பட்ட, இரும்பைக்கொண்டு 2 ஈஃபிள் டவர்கள் கட்ட முடியும். கடலை ஒட்டியுள்ள இந்த ட்ரை டாக்கில், 90,000 டன் எடைகொண்ட கப்பல்களைக்கூட நிறுத்திப் பழுதுபார்க்க முடியும். இது, 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் பிடிக்கும் திறன் கொண்டது.
விக்கிரமாதித்யா
கப்பலைக் கொண்டு வந்து நிறுத்திய பிறகு, 2 மணி நேரத்தில் தண்ணீரை வெளியேற்றி ட்ரை டாக்காக மாற்றி, கப்பலில் பராமரிப்பு மேற்கொள்ளலாம். தண்ணீரை வெளியேற்ற 8 பிரமாண்ட மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டுள்ளன. முதன் முதலில் ஐ.என்.எஸ் கொல்கத்தா போர்க்கப்பலை இதில் நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை வெற்றி பெற்றதையடுத்து, வரும் 28-ம் தேதி இந்த ட்ரை டாக்கை இந்தியக் கடற்படையிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்படைக்கிறார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.