
கொழும்பு: வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு... நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்த வழக்கினை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதிவரை ஒத்திவைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) தீர்மானித்துள்ளது.
மேலும் பேராசிரியர் சரத் விஜேசூரியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக பேராசிரியர் சரத் விஜேசூரியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த அடிப்படை எதிர்ப்பு மனுவினை செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு முன்பாக தாக்கல் செய்யுமாறு தெரிவித்த நீதிபதி, அதற்கு கால அவகாசம் வழங்கும் வகையில் வழக்கு நடவடிக்கைகளை ஒத்திவைத்துள்ளார்.
Dailyhunt
No comments:
Post a Comment