Latest News

`இன்னொரு புல்வாமா தாக்குதல் நடக்கலாம்' - காஷ்மீர் விவகாரம் குறித்து இம்ரான் கான் எச்சரிக்கை!

காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரத்தை கொடுத்துவந்த சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியத்துக்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நேற்று மசோதா தாக்கல் செய்யும்போதே எதிர்ப்பு தெரிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். ``காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இந்திய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் ராணுவம் அதிக அளவில் குவிக்கப்படும் இந்தசூழலில் பேச்சுவார்த்தையை ட்ரம்ப் கூறியபடி நடத்த, இதுவே சிறந்த தருணம். இந்த சூழல் தொடர்ந்தால், அது பிராந்திய நெருக்கடிக்கு வழி வகுக்கும்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில் காஷ்மீர் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பேசியவர், ``சிறப்பு சட்டம் ரத்தால் காஷ்மீரிகள் போராடுவார்கள். இந்தியா அவர்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிடும். பின்னர் புல்வாமா போன்ற தாக்குதல்கள் மீண்டும் நிகழும். இது நடக்கும் என்று நான் ஏற்கனவே கணித்துவிட்டேன். அவர்கள் மீண்டும் நம் மீது பழியை வைக்க முயற்சிப்பார்கள். அவர்கள் மீண்டும் நம்மை தாக்கக்கூடும். நாமும் திருப்பி தாக்குவோம். பிறகு என்ன நடக்கும். அவர்கள் நம்மை தாக்குவார்கள் நாமும் பதிலடி கொடுப்போம். இது அப்படியே போருக்கான வழியை ஏற்படுத்தும். அந்த போரில் யார் வெல்வார்கள்? யாரும் வெல்ல மாட்டார்கள். மாறாக அது உலகம் முழுவதிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இது ஒன்றும் அணுகுண்டு அச்சுறுத்தல் கிடையாது" என்று கட்டமாக பேசியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.