Latest News

எக்ஸ்பிரஸ் ரயிலில் போதை ஐஸ்க்ரீம்! - டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம்


டெல்லியிலிருந்து ராஞ்சி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒரு மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக டிக்கெட் பரிசோதகர் மற்றும் பேன்ட்ரி பணியாளர் மீது ட்விட்டரில் ஒரு பெண் குற்றம்சாட்டியிருந்தார். அந்த ரயிலில் பயணித்த மாணவி வாங்கிய ஐஸ்க்ரீமில் திருட்டுத்தனமாக போதைப் பொருளைக் கலந்து கொடுத்துள்ளனர். அதன்பின் அப்பெண்ணிடம் பாலியல்ரீதியாகத் தவறாக நடக்க முயன்றிருக்கிறார்கள். இதில் அந்த ரயிலில் பணியிலிருந்த டிக்கெட் பரிசோதகரும் பேன்ட்ரி பணியாளர் ஒருவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

ராஜ்தானி எக்ஸ்பிரஸ்
இந்தச் சம்பவம் குறித்து, அந்த மாணவிக்குத் தெரிந்த பெண் ஒருவர், ட்விட்டரில் பதிவுசெய்து, அதில் ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளின் ஐடியையும் டேக் செய்திருக்கிறார். மேலும் அந்த ட்வீட்டில், பாதிக்கப்பட்ட பெண் ஒரு மாணவி என்பதால் புகாரளித்தால் அதன்பிறகான சட்டரீதியிலான நடவடிக்கைகளால் அப்பெண்ணின் எதிர்காலம் மேலும் பாதிக்கப்படலாம் என்று அஞ்சுவதாகவும், இந்தப் புகார்மீது முதல் தகவல் அறிக்கை பதியாமலேயே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

உடனே, இதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு அந்தப் புகாரில் நம்பகத்தன்மை இருப்பது உறுதியானது. உடனே அதில் சம்பந்தப்பட்ட ராஞ்சியைச் சேர்ந்த சரோஜ் என்ற டிக்கெட் பரிசோதகர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். பேன்ட்ரி பணியாளரும் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

ஐஸ்க்ரீம்
சில நாள்களுக்கு முன்னர் தனியார் வாடகைக்கார் ஓட்டுநர் தன்னிடம் தகாத முறையில் பேசினார் என்று பெங்களூரு பெண் ஒருவர் ட்விட்டரில் கூறிய குற்றச்சாட்டு பரபரப்பைக் கிளப்பியிருந்தது. தற்போது டிக்கெட் பரிசோதகர் மீதான குற்றச்சாட்டின்மீது விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களும் புகாரளிக்கும் முறையாக மாறியிருப்பது நல்ல மாற்றமே!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.