Latest News

  

சொத்துக்களை பறிமுதல் செய்ய தடை கோரி விஜய் மல்லையா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல்

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் தொழில் அதிபர் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார்.இதுதொடர்பாக சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்ட சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ள மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அவரை நாடு கடத்தக்கோரும் வழக்கு இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இதற்கிடையே மல்லையாவின் சொத்துக்கள் மற்றும் உறவினர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் மல்லையா மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் கிங்பி‌ஷர் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களை தவிர்த்து வேறு எந்த சொத்துக்களையும் பறிமுதல் செய்யக்கூடாது. இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக் கால தடை விதிக்க வேண்டும் என கூறி உள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.முன்னதாக தனது சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பாக சிறப்பு கோர்ட்டில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி மும்பை ஐகோர்ட்டில் மல்லையா மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனுவை மும்பை ஐகோர்ட்டு விசாரிக்க மறுத்துவிட்டது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.