Latest News

  

இறந்ததாக அறிவிக்கப்பட்டவர், புதைப்பதற்கு முன் உயிர்பிழைந்த அதிசயம் !

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் வசித்து வருபவர் பர்கான் ( 20), இவர் கடந்த ஜூன் 21 ஆம் தேதி அன்று ஒரு சாலைவிபத்தில் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.இதைக்கேட்டு அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அவரை சோகம் ததும்பிய மனதுடன் கண்ணீர்விட்டுக்கொண்டு கல்லறை நோக்கி நடந்தனர்.

ஆனால் அங்கு கல்லறையை அடைந்ததும், அவரது உடலில் அசைவு வந்ததைப் பார்த்த உறவினர்கள், அவரை மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

பின்னர் பர்கானின் உடலில் உயிர் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.தற்போது வரை சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை செலவுசெய்து பர்கானை காப்பாற்றி வருவதாக பர்கானின் உறவினர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.மேலும் பர்கானின் உடலில் மூளை செயல்படுவதாகவும், ரத்த அழுத்தம் சரியாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.அடக்கம் செய்யப் போகின்ற நேரத்தில் பர்கான் உயிர் பிழைத்தால் இந்த கஷ்டத்திலும் சிறுது நிம்மதி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.