Latest News

  

11 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் வழக்கு நாளை விசாரணை

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு நாளை (ஜூலை 3) விசாரணைக்கு வருகிறது. 2017 ஆம் ஆண்டு சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யகோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து திமுக சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் ஆஜரான திமுக வழக்கறிஞர் எம்.எல்.ஏ க்கள் மீதான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு , வழக்கை விசாரிக்க புதிய அமர்வு விரைவில் அமைக்கப்படும் என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பாப்டே தலைமையில் நாளை நடைபெற உள்ளது

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.