
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, ஏற்காடு, எடப்பாடி, சங்ககிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழையை தொடர்ந்து வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் கடந்த சில நாட்களாக புழுக்கத்தில் தவித்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்தனர்.
No comments:
Post a Comment