
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டத்தில் கோடை வெயில்
வறுத்தெடுத்தது. கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் குளிர் காற்று வீசியது.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்
பகுதியான செண்பகத்தோப்பு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்யத்
தொடங்கியது.
சூறாவளியின் வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல்
செண்பகத் தோப்பு பகுதியில் 400 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஏராளமான
மாமரங்கள் வேரோடு சாய்ந்தன. இதே போல் அந்தப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த
வாழை மரங்களும் முறிந்து விழுந்தன.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, மாங்காய் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தோம்.
தற்போது சூறாவளியில் மாங்காய்கள் உதிர்ந்து விட்டதால்
கிலோ 5 ரூபாய்க்கு விலை போகுமா என்பது சந்தேகம் தான் என்று தங்களது வேதனையை
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment