Latest News

திமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ; இந்தியாவின் வில்லன் மோடி: உதயநிதி

திமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ. அதை எல்லோரும் பார்த்து பயப்படுகிறார்கள் என்று பிரச்சாரத்தின் போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
 
தமிழகத்திற்கு ஒகி, கஜா புயல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்போது ஒருமுறை கூட வராத மோடி ஓட்டுக்காக தமிழகத்திற்கு 4 முறை வந்துள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

திமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ. அதை எல்லோரும் பார்த்து பயப்படுகிறார்கள். தேர்தலில்ஹீரோ என்று ஒருவர் இருந்தால் வில்லன் என்று ஒருவர் இருப்பார். இந்தியாவின் வில்லன் மோடி தான், அவருக்கு கைக்கூலி என்று இருவர் இருக்கிறார்கள்.

மேலும், விவசாயிகளை பாதிக்கக்கூடிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம், திமுக தேர்தலில் வெற்றி பெற்றால் தடை செய்யப்படும்.

எடப்பாடி பழனிசாமி பற்றி கடுமையான விமர்சனம் செய்த அன்புமணி ராமதாஸுடன் சேர்ந்து அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதேபோன்று தேமுதிக விஜயகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே இடையே கடுமையான மோதல் இருந்து வந்தது. சட்டமன்றத்தில் ஜெயலலிதா குறித்துகடுமையான விமர்சனம் வைத்தவிஜயகாந்துடன் கூட்டணி வைத்தது குறித்து வருந்துகிறேன் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.

அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த பாமகவும், தேமுதிகவும் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது, சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும், ஓட்டுக்காகவும் தான் என்று தெரிவித்த அவர்.அதிமுக கூட்டணி கட்சிகள் மக்களிடம் வந்தால் மக்கள், அவர்களிடம்கேள்வி கேட்க வேண்டும்" என்று உதயநிதி ஸ்டாலின் அவரது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
newstm.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.