Latest News

  

வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவது ஏன்? சீதாராம் யெச்சூரி

வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஏன் என மக்களுக்கு ராகுல் காந்தி விளக்கவேண்டும் எனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுவது குறித்து பேசிய அவர், யாரும் எங்கிருந்தும் போட்டியிடலாம். ஆனால் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதுஏன் என்று மக்களுக்கு ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

வயநாட்டில் இடதுசாரி கூட்டணிக்கு எதிராக போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் கட்சி என்ன சொல்ல வருகிறது என்பது புரியவில்லை. மதசார்பற்ற ஜனநாயம் நிலைக்குமா? நிலைக்காதா? என்பதை தீர்மானிக்க போகும் தேர்தல் இது என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
newstm.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.