Latest News

இழுபறி முடிந்தது.. தேமுதிக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.. 4 தொகுதிகள் ஒதுக்கீடு

 தொடர் கூட்டம்
லோக் சபா தேர்தலுக்கான அதிமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மூன்று வாரமாக தேமுதிக தனது கூட்டணி அறிவிப்பை வெளியிட தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தது. அதிமுகவுடன் தேமுதிக பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

ஆனாலும் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகமல் இழுபறி நீடித்தது. இந்த நிலையில் தற்போது கூட்டணி ஒப்பந்தம் சுமுகமாக நடந்து முடிந்து உள்ளது.

தொடர் கூட்டம்

இதுவரை தேமுதிக சார்பாக 6க்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மீண்டும் தேமுதிக தனது லோக்சபா கூட்டணி முடிவை எடுக்க ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதன்பின் அதிமுக தலைவர்களுடன் ஆலோசனை நடந்தது.
 ஒப்பந்தம் ஆலோசனை

ஒப்பந்தம் ஆலோசனை

சென்னை ஹோட்டல் கிரவுன் பிளாசாவில் இறுதிக்கட்ட ஆலோசனை நடந்தது. இதில் இதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஹோட்டல் கிரவுன் பிளாசா சென்றார். அவர் அங்கு அதிமுக தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்.

எத்தனை நிமிடம் சுமார் 20 நிமிடம் இந்த ஆலோசனை நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முக்கிய அதிமுக நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். அதேபோல் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

எத்தனை இடம்
எத்தனை இடம் தேமுதிகவுக்கு அதிமுகவில் 4 தொகுதிகள் அளிக்கப்பட்டு உள்ளது. கடும் இழுபறிக்கு பின் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த தொகுதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.