Latest News

3 மணி நேரமாக நீடிக்கும் கிரண்பேடி- நாராயணசாமி பேச்சுவார்த்தை.. நாளையும் தர்ணா தொடருமா?

cm press meet regarding attend kiranbedi meeting
புதுச்சேரி: புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை இன்றைய தினம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநர் மாளிகை வெளியே இன்று 6 வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று மீண்டும் மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதுகுறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆளுநர் கிரண்பேடி மாலை பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைத்துள்ளார் என்றும், மக்கள் நல பிரச்சனைகளை கருத்தில் கொண்டு தானும் அமைச்சர்களும் ஆளுநர் அழைப்பின் பேரில் ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் அமைச்சர்களுடன் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்திருந்தார்.

cm press meet regarding attend kiranbedi meeting
நேற்றைய தினம் தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென நாராயணசாமி கூறியிருந்த நிலையில் கிரண்பேடி அதற்கு மறுப்பு தெரிவித்து, நான் தான் பேச்சுவார்த்தைக்கு அழைத்தேன். பேச்சுவார்த்தையில் யாரெல்லாம் இடம்பெற வேண்டுமென நான் முடிவு செய்வேன் என கூறியதால் நேற்றைக்கு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

cm press meet regarding attend kiranbedi meeting
இந்நிலையில் இன்று மீண்டும் பேச அழைத்திருந்தார். அதை ஏற்று நாராயணசாமி இன்றைய பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளார். இரு தரப்புக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையின் இறுதியில் சுமூக முடிவு எட்டப்படுமா என்பது தெரிய வரும்.
இந்த பேச்சுவார்த்தையில் புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், அரசுத் துறை செயலாளர்கள், ஆளுநரின் சிறப்பு அதிகாரி தேவநீதி தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.