Latest News

  

கவுரி லங்கேஷ் கொலை: பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காத சர்ச்சை விவகாரம், ராம்சேனா தலைவர் சர்ச்சை கருத்து

 கவுரி லங்கேஷ் கொலை: பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காத சர்ச்சை விவகாரம், ராம்சேனா தலைவர் சர்ச்சை கருத்து
கவுரிலங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை பிரதமர் மோடி எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. கவுரி லங்கேஷை சுட்டுக்கொலை செய்ததற்கு பேஸ்புக்கில் பாராட்டுத் தெரிவிக்கும் பலர் மோடியின் ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டி இருந்தார். மோடி கருத்து தெரிவிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பட்டு வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு நவீன்குமார், பரசுராம் வாக்மோர் உள்பட 6 பேரை கைது செய்துள்ளது. பரசுராம் வாக்மோர் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு எதிராகவும், அவருக்கு ஆதர
கவுரிலங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை பிரதமர் மோடி எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. கவுரி லங்கேஷை சுட்டுக்கொலை செய்ததற்கு பேஸ்புக்கில் பாராட்டுத் தெரிவிக்கும் பலர் மோடியின் ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டி இருந்தார். மோடி கருத்து தெரிவிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பட்டு வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு நவீன்குமார், பரசுராம் வாக்மோர் உள்பட 6 பேரை கைது செய்துள்ளது. பரசுராம் வாக்மோர் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு எதிராகவும், அவருக்கு ஆதரவாகவும் ஸ்ரீராமசேனை அமைப்பினர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்திருந்தார்கள். வாகவும் ஸ்ரீராமசேனை அமைப்பினர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்திருந்தார்கள். கவுரி லங்கேஷ் கொலைக்கும் ஸ்ரீராமசேனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பிரமோத் முத்தாலிக் கூறியுள்ளார். இந்நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். 

மராட்டியம் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதுதான் 4 செய்தியாளர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது காங்கிரஸ் அரசின் தோல்வி தொடர்பாக கேள்வி எதுவும் எழுப்பப்படவில்லை. இருப்பினும் இடதுசாரி அறிவு ஜீவிகள், கவுரி லங்கேஷ் கொலையில் பிரதமர் மோடி கருத்து சொல்ல வேண்டும் என்கிறார்கள். கர்நாடகாவில் நாய் செத்தால்கூட பிரதமர் மோடி கருத்து சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? என்று கேள்வியை எழுப்பினார். பின்னர் சமாளிக்கும் விதமாக, கவுரிலங்கேஷை நாயுடுடன் நேரடியாக ஒப்பிட்டுப் பேசவில்லை.

கர்நாடகத்தில் நடக்கும் ஒவ்வொரு கொலைக்கும், பிரதமர் மோடி கருத்து கூறிக்கொண்டிருக்க முடியாது என்ற பொருளில் சொன்னோன் என்று கூறியுள்ளார்.

 ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி குமாரசாமியிடம் கேள்வி எழுப்பிய போது அவர் பதிலளிக்கையில், “எதையும் சொல்ல நான் விரும்பவில்லை, முத்தாலிக்காக இருக்கட்டும், யாராக வேண்டுமென்றாலும் இருக்கட்டும் சட்டத்தை மீறினாலும், சட்டவிரோதமாக செயல்பட்டாலும் நாங்கள் கடுமையான நடவடிக்கையை எடுப்போம் என கூறிஉள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.