தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று (07/01/2018) காலை முதல் மாலை வரை மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA) மற்றும் தஞ்சாவூர் ஸ்ரீ காளி இரத்த வங்கி இணைந்து நடத்தும் இரத்த தான முகாம் TIYA சங்க வளாகத்தில் நடைபெற்றது.
அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA) தலைவர் சபீர் தலமையில் நிர்வாகிகள் மற்றும் முஹல்லா இளைஞர்கள் முன்னிலையில் நடைபெற்றது இந்த முகாமை, நமது தாஜுல் இஸ்லாம் சங்கம் தலைவர் ஹாஜி MMS. சேக் நசுருதீன் , செயலாளர் ஹாஜி M.S.ஜபுருல்லாஹ ஆகியோர் துவங்கி வைத்தனர் .
இம் முகாமில் 40 க்கும் மேற்ப்பட்டவர்கள் இரத்த தானம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இரத்த தானம் குறித்து விழிப்புணர்வு போஸ்டர்களும் சங்க வளாகத்தில் ஒட்டப்பட்டது. இரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் அதிரை TIYAவின் சார்பில் நன்றியிணை அன்போடு தெரிவித்துக்கொகிறோம் .
என்றும் அன்புடன்
அதிரை TIYA நிர்வாகம்



No comments:
Post a Comment