அயோத்தியில் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்ட பாபர் மசூதி (கோப்பு படம்)
அயோத்தியில, ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி சர்ச்சை தொடர்பான வழக்கின்
இறுதி விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று தொடங்கியது. இதுதொடர்பாக
தாக்கலாகியுள்ள மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 8ம் தேதிக்கு ஒத்தி
வைத்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமர் பிறந்த இடம் - பாபர் மசூதி தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு, சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லீலா ஆகிய மூன்று அமைப்புகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமர் பிறந்த இடம் - பாபர் மசூதி தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு, சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லீலா ஆகிய மூன்று அமைப்புகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதை உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், ஷியா மத்திய வக்பு
வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘சர்ச்சைக்குரிய இடத்தில்
ராமர் கோயிலை கட்டிக் கொள்ளலாம். பாபர் மசூதியை நியாயமான தூரத்தில்
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கட்டிக் கொள்ள சம்மதிக்கிறோம்’
என்று தெரிவித்தது. இதற்கு சன்னி மத்திய வக்பு வாரியம் சார்பில் எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை
நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வு
முன், இறுதி விசாரணை இன்று தொடங்கயது. இதை தொடர்ந்து சன்னி வக்ப் வாரியம்
உட்பட பல அமைப்புகள் சார்பில் தாக்கலான மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி
8ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
மூத்த
வழக்கறிஞர்கள் பராசரன், வைத்யநாதன் உள்ளிட்டோர் ராம் லாலா அமைப்பு சார்பில்
ஆஜராகின்றனர். வழக்கறிஞர்கள் கபில் சிபல், அனூப் ஜார்ஜ் உள்ளிடோர்
ஆஜராகின்றனர். உத்தரப் பிரதேச அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்
மேத்தா ஆஜராகிறார்.
சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவது
இந்துக்களின் அடிப்படை உரிமை எனக்கூறி பாஜக எம்.பி. சுப்பிரமணியன்
சுவாமியும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25
ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை தொடங்க இருப்பது
மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment