Latest News

  

உத்தரப் பிரதேசத்தில் கந்து வட்டி கொடுமை: கடனை திருப்பி செலுத்தாததால் காலணியால் அடித்த நபர் கைது

உத்தரப் பிரதேசத்தில் கடனை திருப்பி செலுத்த முடியாத ஒருவரை, காலணியால் அடித்து உதைத்த கந்து வட்டி ஆசாமியை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் வட்டிக்கு பணம் வாங்கிய நபர் ஒருவர் குறிப்பிட்ட காலத்தில் பணத்தை திருப்பிச் செலுத்த முடிய வில்லை. இதையடுத்து அவரிடம் வட்டிக்கு பணம் கொடுத்த கந்து வட்டி நபர், சரமாரியாக தாக்கியுள்ளார்.
   
 மேலும் அவரை காலணியால் அடித்துள்ளார். கொடூரமாக தாக்கப்பட்ட நபர் காயமடைந்துள்ளார்.
 
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காலணியால் கொடூரமாக தாக்கிய கந்து வட்டி ஆசாமியை கைது செய்தனர். இதுமட்டுமின்றி கந்து வட்டி கொடுமை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.