Latest News

  

50% இடஒதுக்கீடு உச்ச வரம்பு மீறமுடியாதது: காங்கிரஸ்-ஹர்திக் படேலுக்கு அருண் ஜேட்லி பதிலடி


காங்கிரஸ் கட்சி 50%-க்கும் அதிகமாக இடஒதுக்கீடு அளிப்பதாக ஹர்திக் படேல் கூறியதற்கு வினையாற்றிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இடஒதுக்கீடு உச்சவரம்பான 50% என்பதை ஒன்றும் செய்ய முடியாது, அது மீற முடியாதது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அருண் ஜேட்லி கூறும்போது, “இதுவரை நான் அறிக்கைகளை பார்த்த வரையில் காங்கிரஸ்-ஹர்திக் படேல் கிளப் பரஸ்பர சீரழிவு என்று தெரிகிறது.
நாட்டின் சட்டம் தெளிவாக உள்ளது. இது உச்ச நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்ட ஒன்று. ராஜஸ்தான் விவகாரத்தில் கடந்த வாரம்தான் 50% இடஒதுக்கீட்டு வரம்பை மீற முடியாது என்பது மறு உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் மக்களையும் தங்களையும் ஏமாற்றிக் கொள்ளலாம். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளுக்கு இதில் இடமில்லை” என்றார்.
 
 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.