Latest News

தமிழகத்தில் நாளை அனல் காற்று வீசுமாம்.. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை

 Meteorological department has warned tomorrow is going to be really very hot
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் நாளை அனல் காற்று வீசும் என்பதால் பகல் 12 மணி முதல் 3 மணிவரை மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்திலேயே அதிக பட்சமாக திருத்தணியில் இன்று 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை, கரூர், திருச்சி, மதுரையில் இன்று வெப்பநிலை 107 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நாளை அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளில் பொதுமக்கள் யாரும் வெயிலில் வெளியே வர வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் நாளை அனல் காற்று வீசும் என்பதால் பகல் 12 மணி முதல் 3 மணிவரை மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் எனவும் கடும் அனல் காற்று வீசும் என்பதால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் தேவையின்றி பகல் 12 மணி முதல் 3 மணிவரை பொது மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.