நஷ்டத்தில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை உயிர்கொடுத்து
மீண்டும் தூக்கி நிறுத்த பல கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என்று சிஏஜி
அறிக்கை தெரிவிக்கிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட
சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஏர் இந்தியா நிறுவனம் கடும்
நஷ்டத்தில் உள்ளது. இதற்கு தேவைப்படும் நிதி குறித்து மத்திய அரசு மறு
ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சிஏஜி அறிக்கைபடி 2012-13ம் நிதியாண்டில்
ரூ.1,456 கோடியும், 2013-14ல் ரூ.2,967 கோடியும், 2014-15ல் ரூ.1,993
கோடியும் நஷ்டம் அடைந்துள்ளது. 2012ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி
2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதும் ஏர் இந்தியா பொருளாதார
மறுகட்டமைப்புக்காக ரூ.42,182 கோடி பங்கு தொகையாக வழங்கியுள்ளது
குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் செலவுகளை கட்டுப்படுத்த ஏர் இந்தியா நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது. எதிர்க்கால பொருளாதார நிலையை கருதி விமான பயன்பாட்டில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளது. ஏர் இந்தியாவின் ஆண்டு வருவாய் ரூ.500 கோடி இலக்கை அடைய தோல்வி அடைந்ததால், 2011-12 முதல் 2015-16 வரை ரூ.1,936 கோடி இடைவெளி ஏற்பட்டுவிட்டது. எனவே பெருத்த நஷ்டத்தில் மூழ்கி தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை மீட்டு மறுகட்டமைப்பு செய்ய பல கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையிஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம் செலவுகளை கட்டுப்படுத்த ஏர் இந்தியா நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது. எதிர்க்கால பொருளாதார நிலையை கருதி விமான பயன்பாட்டில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளது. ஏர் இந்தியாவின் ஆண்டு வருவாய் ரூ.500 கோடி இலக்கை அடைய தோல்வி அடைந்ததால், 2011-12 முதல் 2015-16 வரை ரூ.1,936 கோடி இடைவெளி ஏற்பட்டுவிட்டது. எனவே பெருத்த நஷ்டத்தில் மூழ்கி தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை மீட்டு மறுகட்டமைப்பு செய்ய பல கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையிஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment