இலங்கையின் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8
மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
வங்க கடலில் ஒரு படகில் 8 மீனவர்கள்இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 8 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக
கைது செய்தனர். பின்னர் அவர்களது படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் 8
பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர்.
அடுத்தடுத்த நாள்களில் இதுவரை 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது
செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 15 நாள்களுக்கு முன்பு தமிழக எல்லையில்
மீன்பிடித்துக் கொண்டிருந்த பிரிட்ஜோ என்ற மீனவரை இலங்கை கடற்படையினர்
துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசு
உறுதியளித்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு மீன்பிடித்துக்
கொண்டிருந்த மீனவர்களை கற்களை வீசியும், வலைகளை சேதப்படுத்தியும் தாக்கி
இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment