Latest News

  

தமிழ்நாட்டு அரசியல் குறித்து பேச ரஜினிகாந்துக்கு தகுதி இல்லை- சரத்குமார் கடும் காட்டம்!

 
தமிழ்நாட்டு அரசியல் குறித்து பேசுவதற்கு எந்த தகுதியுமே இல்லாதவர் நடிகர் ரஜினிகாந்த் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் கடுமையாக சாடியுள்ளார். துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது என பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினிகாந்தின் பேச்சுக்கு நடிகர் சரத்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எந்த வகையான அசாதாரண சூழல் நிலவுகிறது என்பதை ரஜினிகாந்த் தெளிவுபடுத்த வேண்டும்; தமிழ்நாட்டு அரசியல் குறித்து பேசுவதற்கு ரஜினிகாந்துக்கு எந்த தகுதியுமே இல்லை. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக் கூடாது; ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அதை முதல் ஆளாக எதிர்ப்பேன் என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.