Latest News

ஏ.டி.எம்.,க்கு எடுத்துச் செல்லப்பட்ட வங்கி பணம் ரூ.1.18 கோடி கொள்ளை.. சென்னையில் பரபரப்பு

 
சென்னை திருவேற்காடு பகுதியில் ஏ.டி.எம்.,களுக்கு பணம் நிரப்ப எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.18 கோடி வங்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.டி.எம்.,களுக்கு பணம் நிரப்புவதற்காக பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமான 1.18 கோடி ரூபாய் பணம் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டுள்ளது. வாகனத்தை இசக்கிமுத்து என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் பாதுகாவலர் ஜோயல் சென்றுள்ளார்.

புலியம்பட்டி என்னும் பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு இருவரும் டீ குடிக்க சென்றுள்ளனர். அப்போது பாதுகாவலர் ஜோயலின் கவனத்தை திசை திருப்பிவிட்டு டிரைவர் இசக்கிமுத்து பணத்துடன் வாகனத்தை கொள்ளையடித்து சென்றார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய இசக்கிமுத்துவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.