Latest News

அதிரையில் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணியினை விரைவுப்படுத்தக்கோரி ஆலோசனைக்கூட்டம் !

அதிராம்பட்டினம், ஜூலை 31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணியினை விரைவுப்படுத்தக்கோரி ஆலோசனைக்கூட்டம் சாரா திருமண மஹாலில் இன்று மாலை நடந்தது.

கூட்டத்திற்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு சங்க ஆலோசகர் வ. விவேகானந்தம் தலைமை வகித்தார். முத்துப்பேட்டை சமூக ஆர்வலர்கள் கே.எஸ்.எச் சுல்தான் இப்ராஹீம், எல்.ஐ.சி ராஜ்மோகன், கோட்டை ரோட்டரி சங்க தலைவர் மா.வீரபத்திரன், ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் ஜி. ஜெயசீலன், தஞ்சை மாவட்ட தொழிலாளர் நல சங்க தலைவர். ஆர். முத்துகுமரவேல், அதிராம்பட்டினம் வர்த்தக சங்க பொறுப்பாளர் என்.ஏ முஹம்மது யூசுப், சுற்றுச்சூழல் சங்க செய்தி தொடர்பாளர் எஸ். லாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக சவூதி ஜித்தாவில் உள்ள அய்டா சேவை அமைப்பின் செயலாளர் சம்சுதீன், துணைச் செயலாளர் மீராஷா ராபியா ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
இருப்பு பாதை பயணிகள் நலனுக்காகவும், திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணியினை விரைந்து முடிப்பது தொடர்பான கோரிக்கையை எடுத்துச்செல்ல அதிராம்பட்டினத்தில் சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவினர் அமைப்பது.

அகல ரயில் பாதை பணி விரைவுப்படுத்துவது தொடர்பாக சவூதி ஜித்தாவில் உள்ள அய்டா சேவை அமைப்பினர் இந்திய தூதரகம் மூலம் மேற்கொள்ளும் முயற்சிக்கு ஆதரவளிப்பது, இருப்பு பாதை கோரிக்கை பணிக்கு உதவி செய்வதை வரவேற்பது என முடிவு செய்யப்பட்டது.

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை விரைவில் அமைந்திட மத்திய, மாநில அரசுகளின் மக்கள் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரை சந்தித்து முறையிடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் சேக்கனா நிஜாம், சகாபுதீன், நூருல், அஃப்ரீத், சேக், அப்துல் ஜப்பார், நிஜாமுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.