7-வது ஊதிய பரிந்துரையில் முதல்கட்டமாக அடிப்படை ஊதியத்தில் 14.29 சதவீத உயர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியம் மற்றும் அனைத்து படிகளையும் சேர்த்து 23.5 சதத ஊதிய உயர்வு வழங்க 7-வது ஊதிய குழு பரிந்துரை செய்திருந்தது.. இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது. கடந்த ஜனவரி முதல் முன் தேதியிட்டு ஊதிய உயர்வு அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அடிப்படை ஊதியம் மீதான உயர்வை மட்டும் உடனடியாக அளிக்க மத்திய அரசு ஒப்பு கொண்டுள்ளது. மேலும், வீட்டு வாடகை உள்ளிட்ட இதர படிகள் மீதான சுமார் 9.5 சதவீத உயர்வு குறித்து நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்ய உள்ளது. அந்த குழு 4 மாதங்களில் அறிக்கை அளிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அடிப்படை ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பாணையை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாத சம்பளத்தில் ஊதிய உயர்வு அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வுதியதாரர்களும் பயனடைவார்கள். P
No comments:
Post a Comment