பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.25 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 42 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்த புதிய விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 15 ஆம் தேதிகளில் இந்த விலை மாற்றம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.25 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 42 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் மூலம் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.64.76-ல் இருந்து ரூ.62.51 ஆக குறையும். ரூ.54.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீசல் இன்று நள்ளிரவு முதல், ரூ.54.28-க்கு விற்பனை செய்யப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. கடைசியாக ஜூலை 1-ம்தேதி விலை மாற்றத்தின்போது, பெட்ரோல் விலை 89 காசுகளும், டீசல் விலை 49 காசுகளும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment