கச்சத்தீவை மீ்ட்போம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளனர். அதன்படி முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்பார் என நம்புகிறேன் என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மறைந்த இஸ்லாமியத் தலைவர் காயமிதே மில்லத்தின் 121வது பிறந்த நாள் விவா இன்று கொண்டாடப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள பெரிய பள்ளிவாசலில் உள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவினர் மரியாதை செலுத்தி மலர் போர்வை பாோர்த்தினர்.
பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர் காயிதே மில்லத். அதேபோல், சிறுபான்மையினர் நலன் மற்றும் தமிழர்களின் நலனை காக்க திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் நலனுக்காக போராடும் இயக்கம் திமுக. அதிமுக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவை மீட்போம் என கூறியிருந்தனர். அதன்படி கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன் என்றார் ஸ்டாலின்.
No comments:
Post a Comment