Latest News

தலித் மாணவர் தற்கொலை செய்த பல்கலைகழகத்திற்கு ராகுல் காந்தி வருகை !


ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் ரோகித் (வயது 28). இவர் ஐதராபாத்தில் உள்ள கேந்திராய பல்கலைக்கழகத்தில் சயின்ஸ் டெக்னாலஜி பிரிவில் பி.எச்.டி. படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்தார்.தலித் மாணவரான ரோகித் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். கல்வி திறமைக்காக ஸ்காலர்ஷிப் பெற்று வருகிறார். மேலும் அம்பேத்கர் மாணவர் பேரவையில் உறுப்பின ராகவும் உள்ளார். இவருக்கும் பல்கலைக் கழகத்தின் அகில இந்திய வித்யா பரிஷத் மாணவர் சுசில் என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் சாதி பெயரில் ஒழுங்கீனம் நடப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மத்திய மந்திரிகள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இரானி ஆகியோர் பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதினர்.

இந்த கடிதத்தின் அடிப் படையில் ரோகித் உள்பட 5 மாணவர்கள் மீது பல்கலைக் கழக நிர்வாகம் சஸ்பெண்டு நடவடிக்கை எடுத்தது. 5 பேரும் வகுப்புக்கு வரக் கூடாது என்று கூறியதுடன் செமஸ்டர் தேர்வை எழுதவும் அனுமதிக்கவில்லை.சஸ்பெண்டு நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ரோகித் நேற்று தனது நண்பர் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண் டார். அம்பேத்கர் பேரவை பேனர் துணியை கிழித்து தூக்கு கயிறாக பயன்படுத்தி உள்ளார்.தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதி இருந்த கடிதத்தில், பல்கலைக்கழகம் ஒருவரின் திறமையை மதிப்பதில்லை. சாதி அடிப்படையில் பார்க்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். ஆனால், சக மாணவர்கள் போலீசாரை நெருங்க விடவில்லை.ரோகித் தற்கொலைக்கு மத்திய மந்திரிகள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இரானி ஆகியோரே காரணம்.  அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி னார்கள். மாணவரின் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு கூட அனுமதிக்காமல் அவர்கள் ரோகித் பிணத்தை சுற்றி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழ கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இன்றும் போராட்டம் நீடிக்கிறது.

இந்த நிலையில் மாணவர் இறந்த விவகாரம் குறித்து கேள்விப்பட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று ஐதராபாத் வந்தார். ரோகித் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். பல்கலைக் கழகத்துக்கு சென்ற அவர் போராட்டம் நடத்தும் மாண வர்களை சந்தித்து ஆதரவு தெரிவித் தார். நடந்த விவரங்களை கேட்டறிந்தார். ராகுல்காந்தியு டன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்கும் ஐதராபாத் வந்தார்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.