Latest News

  

குடியரசு தினவிழா: நேபாளத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் பேருந்துகளை பரிசாக வழங்கிய இந்தியா !


இந்தியாவின் 67-வது குடியரசு தின விழா உலகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாப்பட்டு வருகிறது. இன்று நேபாள தலைநகர் காத்மாண்டில் இருக்கும் இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா கொண்டாப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அந்த நாட்டை சேர்ந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு 33 ஆம்புலன்ஸ்களும், 6 பேருந்துகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. வாகனங்களுக்கான சாவிகளை நேபாளத்திற்கான இந்திய தூதர் ரஞ்சித் ரே வழங்கினார். இந்த விழாவில் சுமார் 2500 பேர் கலந்துக்கொண்டனர்.

இந்திய துணை தூதரகம் அமைந்துள்ள பிர்குன்ஞ் நகரில் நடைபெற்ற மற்றொரு விழாவில் சில தொண்டு நிறுவனங்களுக்கு 7 ஆம்புலன்ஸ்களும், 2 பேருந்துகளும் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.