மதுவிலக்கு குறித்து பாடல் பாடி கைதுசெய்யப்பட்ட பாடகர் கோவனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்எச். ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது “மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலை பாடிய மக்கள் கலை இலக்கிய கழக பாடகர் கோவனை தமிழக அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.
அவரது பாடல் சில விரும்பத்தகாத வரிகள் உள்ளன. ஆனால் மது ஒழிப்புக்கு எதிரான பாடலை தான் அவர் பாடியுள்ளார். எனவே அவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது.தமிழக அரசு அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறினார்.
No comments:
Post a Comment