Latest News

  

பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் அறிவிப்பு எதிரொலி: 2 முக்கிய கோரிக்கைகள் உடனடி ஏற்பு !



அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 19 வது வார்டுகளின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடந்த [ 15-06-2015 ] அன்று அதிரை பேரூராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேரூராட்சி அலுவலக தரப்பில் கோரிக்கைகள் நிறைவேற்ற முயற்சிக்கப்படும் என கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிப்படுவதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் வார்டுகளின் அடிப்படை வசதிகள் எதுவும் செய்துகொடுக்க வில்லை எனவும், அரசியல் காரணங்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், வார்டுகளில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தர வலியுறுத்தி கடந்த [26-10-2015 ] அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்ப்பு நாளில் மனிதநேய மக்கள் கட்சியின் 17 வது வார்டு கவுன்சிலர் சகோதரி ரபீக்கா முஹம்மது சலீம்  மற்றும் 19 வது கவுன்சிலர் சகோதரி செளதா அஹமது ஹாஜா ஆகியோர் தனித்தனியே எழுதிய கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரகத்தில் நேரிடையாக சென்று வழங்கினார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை அதிரை பேரூராட்சியின் மன்றக்கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது மனித நேய மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தரவேண்டும் எனவும், தவறினால் அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என பேசினார்கள். இதற்கு தயாராக அதிரை பேரூராட்சி அலுவலக வராண்டாவில் அதிரை மனிதநேய மக்கள் கட்சியினர் காத்திருந்தனர். இதனால் பெரும் பரபரப்பு கூடியது.

இந்தநிலையில் மன்றக்கூட்டம் முடிந்தவுடன் அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலர் திரு.முனியசாமி மனிதநேய மக்கள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 17 மற்றும் 19 வது வார்டுகளின் முக்கிய கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகக் கூறினார். இதையடுத்து 17 வது வார்டு கவுன்சிலர் ரபீக்கா முஹம்மது சலீம் மற்றும் 19 வது கவுன்சிலர் செளதா அஹமது ஹாஜா ஆகியோர் கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக செயல் அலுவலர் முனியசாமியிடம் வழங்கினார்கள்.

தங்கள் வார்டுகளின் முக்கிய கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து நடத்த இருந்த பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிரை மனிதநேய மக்கள் கட்சியினர் அறிவித்தனர்.

 
 
 
 
 
 
 
நன்றி : அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.