Latest News

15 சிறார்களை சீரழித்துக் கொன்று விட்டேன்.. பதைபதைக்க வைக்கும் டெல்லி இளைஞரின் வாக்குமூலம்


டெல்லியைச் சேர்ந்த ஒரு இளைஞர், தான் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து 15 சிறார்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி பின்னர் கொலை செய்து விட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த நபர் நோய்டாவில் வசித்து வருகிறார். டிரைவராக இருக்கிறார். இவரது பெயர் ரவீந்திர குமார். 24 வயதாகும் இந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில்தான் இந்த பரபரப்புத் தகவல்கள் வெளியாகின.

டெல்லி மற்றும் மேற்கு உத்திரப்பிரதேசத்தில் இந்த கொலை மற்றும் பாலியல் வக்கிரச் செயலில் தான் ஈடுபட்டதாக ரவீந்திர குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கி் ஜூலை 15ம் தேதி இந்த நபரைக் கைது செய்தனர். விசாரணை நடத்தியபோது அவர் செய்துள்ள பல பயங்கர கொலைகள் குறித்த விவரம் வெளியாகி அனைவரையும் அதிர வைததுள்ளது.

குமாரே வலிய வந்து போலீஸாரிடம் தான் செய்த அக்கிரமங்களை விவரித்துள்ளார். கடந்த வருடம் ஒரு சிறுவனை கடத்தி வந்து பாலியல் வக்கிரத்தில் ஈடுபட்டு பின்னர் தொண்டையை கத்தியால் அறுத்து தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டதாக அவர் கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு நோய்டாவில் சுரீந்தர் கோஹ்லி என்பவர் தான் வேலை பார்த்து வந்த வீட்டு உரிமையாளர் மனீந்தர் சிங் பந்தர் என்பவருடன் சேர்ந்து சிறார்களைக் கடத்திக் கொலை செய்து உடல்களை எரித்து வாய்க்காலில் போட்டு சிக்கினார் என்பது நினைவிருக்கலாம். அதில் கோஹ்லிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ரவீந்திர குமார் 15 பேரை கொன்றதாக கூறியுள்ள தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.