அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் ( WCC ) சார்பாக கடந்த 18 ஆண்டுகளாக நடத்தி வந்த மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் 19 ஆம் ஆண்டு தொடர் போட்டி இன்று காலை மேலத்தெரு மருதநாயகம் திடலில் துவங்க இருக்கிறது. இந்த தொடர் போட்டிகளில் பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தரும் தலைசிறந்த 8 அணிகள் பங்குபெற்று விளையாட உள்ளனர்.
இன்றைய முதல் ஆட்டமாக அதிரை ASC அணியினரும், அதிரை SYDNEY அணியினரும் விளையாட இருக்கின்றனர்.
போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறும் சிறந்த அணிகள் மற்றும் சிறந்த வீரர் உள்ளிட்டோருக்கு இறுதிபோட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களால் பல்வேறு பரிசளிப்புகள் வழங்கபட இருக்கின்றது.
நன்றி : அதிரைநியூஸ்
செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப் ( உஜாலா )





No comments:
Post a Comment