ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து முதலில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என ஆச்சார்யா பேட்டியளித்துள்ளார். மேல்முறையீட்டின் போது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோர முடியும் என ஆச்சார்யா கூறியுள்ளார். உச்சநீதிமன்றம் தடை விதித்தால் ஜெ.வின் தகுதி நீக்கம் நீடிக்கும் என்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தால் ஜெ. பதவிக்கு பாதிப்பு ஏற்படும் என ஆச்சார்யா விளக்கம் அளித்துள்ளார். கர்நாடக அரசு உத்தரவிட்டால் வழக்கில் ஆஜராக தயார் என ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை செய்தே நீதிமன்றம் தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது. மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளது என்று பி.வி. ஆச்சார்யா கூறியுள்ளார். மாறுபட்ட தீர்ப்பு வந்துள்ள நிலையில் உச்சநீதிமன்றம் தான் தெளிவுப்படுத்த வேண்டும் என பெங்களூருவில் ஜெ. வழக்கில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா பேட்டியளித்துள்ளார்.
No comments:
Post a Comment