மேலநத்ததில் நடைபெற்ற எழுவர் கால்பந்து தொடர் போட்டியில் அதிரை WFC அணி கலந்துகொண்டு விளையாடியது. இதில் பொதுக்குடி அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1-1 என்ற கணக்கில் கோல் அடித்து இரு அணிகளும் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் ட்ரை ப்ரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் அதிரை WFC அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றிபெற்ற அதிரை அணிக்கு பயிற்சியாளர், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப் ( உஜாலா ) நன்றி.அதிரைநியூஸ்
No comments:
Post a Comment