Latest News

  

நாளை SSLC தேர்வு முடிவு! MYPNOல் காணலாம்!!


SSLC எனப்படும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (21.05.2015 வியாழக்கிழமை) வெளியாகிறது. தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை தயார் நிலையில் உள்ளது. இந்தத் தேர்வு முடிவுகளை MYPNOவில் (www.mypno.com) உடனுக்குடன்  நேரலையில் தெரிந்துக் கொள்ளலாம்.

பத்து லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள், 5 லட்சத்து 32 ஆயிரம் மாணவிகள் மற்றும், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் உள்ளிட்ட மொத்தம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதியுள்ளனர்.

இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

அரசு தேர்வுத் துறையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை கல்லூரிச் சாலை டிபிஐ வளாகத்தில் தேர்வுத் துறையின் இயக்குநர் கே.தேவராஜன் தேர்வு முடிவுகளையும், மாநில அளவில் ரேங்க் பெற்றவர்களின் பட்டியலையும் வெளியிடுகிறார்.

தேர்வு முடிவு வெளியிடப்பட்ட அடுத்த சில வினாடிகளில் கீழ்க்காணும் இணையதளங்களில் மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.


www.tnresults.nic.in / www.dge.tn.nic.in / www.dge1.tn.nic.in / www.dge2.tn.nic.in / www.dge3.tn.nic.in

இந்தத் தேர்வு முடிவுகளை MYPNOவில் (www.mypno.com) உடனுக்குடன்  நேரலையில் தெரிந்துக் கொள்ளலாம். 

பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது.

மே 22 முதல் 27-ம் தேதி வரை மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையத்தின் மூலமாகவும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு தாள்கள் (மொழிப்பாடம், ஆங்கிலம்) கொண்ட பாடத்துக்கு கட்டணம் ரூ.305, ஒரு தாள் கொண்ட பாடத்துக்கு (கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) ரூ.205.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது ஒப்புகைச்சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத் தித்தான் மறுகூட்டல் முடிவுகளை அறிய முடியும்.

பள்ளி தலைமை ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 29 முதல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியரிடம் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்.

பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர் களும் தேவைப்பட்டால் ஜூன் 4 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்களே தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.