Latest News

  

ஆலமரம் மீது மோதிய கார்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாப பலி!


கிருஷ்ணகிரி அருகே நடந்த கோரமான சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக பலியானார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள குரங்குக்கல் மேடு பகுதி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

சாலையில் சென்று கொண்டிருந்த குவாலிஸ் கார் எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஆலமரம் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.

காரில் பயணித்தவர்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்துள்ள ஓமகுப்பம் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் சமீபத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். இன்று சர்ச்சில் ஞானஸ்நானம் பெறுவதற்காக கீழ்பென்னாத்தூர் சென்ற பொழுது இவர்களது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் டிரைவர் திலீப் பலத்த காயமடைந்தார். இவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் இவரது தாய் உள்பட ஏழு பேர் பலியாகினர். இறந்தவர்களின் பெயர் விவரம் வில்லியம்ஸ், ஜெரினிமேரி, ஜொயல், ஜெயந்த், சுசிலா, செல்வி, ஜொன்ஸ் என்று தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.