பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவுடன் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வரும் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க, ஆம் ஆத்மி, மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இத்தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜ முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி, அரவிந்த் கெஜ்ரிவால், அஜய் மக்கான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சில முக்கிய விவரங்கள் தொடர்பாக விவாதம் நடத்த அமித்ஷாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையே டெல்லியில் ஆம் ஆத்மியை காட்டிலும் பாஜவுக்கு சற்று செல்வாக்கு குறைந்துள்ளதாக வந்த கருத்துக்கணிப்பு பா.ஜ.கவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : இன்நேரம்.காம்
No comments:
Post a Comment