Latest News

  

அத்வானிக்கு உருக்கமான கடிதம் எழுதிய சோனியா…


கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சோனியாவிற்கும் அத்வானிக்கும் இடையே கடித பரிமாற்றம் பற்றி பா.ஜ.,வில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், தற்போது அத்வானிக்கு சோனியா எழுதி உள்ள கடிதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானிக்கு கடந்த பிப்ரவரி 25 ம் தேதி 50 வது திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்வானிக்கு சோனியா எழுதியுள்ள கடிதத்தில், 50வது திருமண நாள் காணும் உங்களுக்கும், உங்கள் மனைவி கமலா அத்வானிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கடந்த அரைநூற்றாண்டாக நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையில், பல்வேறு ஏற்ற தாழ்வுகளின் போது ஒருவருக்கொருவர் பலமாகவும், ஆதரவாகவும் இருந்துள்ளீர்கள். உண்மையில் உங்களின் ஆசிர்வாதம் தான் எங்களுக்கு தேவை. பிப்ரவரி 25 உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் சிறப்பான நாள். அன்று தான் ராஜீவை நான் திருமணம் செய்து கொண்டேன். இந்த வருடம் எனது 47வது திருமணநாள் என குறிப்பிட்டுள்ளார்.

சோனியா அனுப்பிய கடிதத்தை பார்த்த பிறகு அத்வானி, சோனியாவுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அத்வானியின் 50வது திருமண நாளுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள், அத்வானியின் இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பா.ஜ., அளித்த வெளிநாட்டில் கறுப்பு பணம் பட்டியலில் சோனியாவின் பெயரை தவறுதலாக சேர்த்தற்க்கு சோனியாவுக்கு மன்னிப்பு கடிதம் ஒன்றை, அத்வானி அனுப்பினார். அத்வானி அனுப்பிய மன்னிப்பு கடிதம் வெகு நாட்களுக்கு பிறகு வெளியானது. இது பா.ஜ.,வில் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.