Latest News

ரூ.500,1000 நோட்டுகளை மாற்ற மேலும் ஆறு மாசம் அவகாசம் நீட்டிப்பு!


கள்ள நோட்டு புழக்கத்தை குறைக்கும் நோக்கோடு, 2005ம் ஆண்டிற்கு முன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு செய்து அதை மாற்றுவதற்கான கால ‘கெடு’ வரும் ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது என்று ரிசர்வ் வங்கி நேற்று வரை சொல்லி வந்த நிலையில் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வசதியை மேலும் ஆறு மாத காலத்திற்கு நீடித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டு்ள்ள செய்தி குறிப்பில்,”கடந்த 2005ம் ஆண்டுக்கு முன், ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்ட ரூபாய் நோட்டுகளில் ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்காது. 2005க்கு பின் வெளியான நோட்டுகளில் தான் எந்த ஆண்டில் அந்த நோட்டு தயாரிக்கப்பட்டது என்பது தனியாக குறிக்கப்பட்டிருக்கும். இப்படி 2005ம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் வெகு குறைவாக இருப்பதால் அந்த நோட்டுகளை மாற்ற முடிவு செய்ததோம். ஆனால்.அப்போது போதுமான கால அவகாசம் கேட்டு பொதுமக்கள் கருத்து தெரிவித்ததை அடுத்து ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக் கெடுவை ஜன., 1 வரை, ரிசர்வ் வங்கி நீட்டிருந்தோம். அதன்படி இதுவரை, 53 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 147 கோடி ரூபாய் மதிப்பிலான, 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு உள்ளன.இந்நிலையில் இன்னும் டைம் கேட்பதால் மேலும் ஆறுமாதம் காலஅவகாசம் அதாவது ஜூன் மாதம் 2015-ம் ஆண்டு வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.