Latest News

கள்ளக் காதலை வளர்க்க உதவும் கைப் பேசி! – சர்வே ரிசல்ட்


இப்போதெல்லாம் நாளிதல் மற்றும் டி வி செய்திகளில் ‘கள்லக் காதல்” என்ற சொல்லுடம் மினிமம் மூன்று நியூஸ்களாவது இடம் பெறுவது வாடிக்கையாகி விட்டது.உண்மையில் காதலில் கள்ளக் காதல் என எதுவும் கிடையாது. திருமணம் ஆன பிறகு, திருமணம் ஆன இன்னொரு பெண் மீது வருவதும் காதலைதான் இப்படி சொல்கிரார்கள் அந்தக் காலத்தில் இருந்து கடைப் பிடித்து வந்த ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரம், பல நேரங்களில் மீறப்பட்டு வருகிறது. அதிலும் இப்போதெல்லாம் மனைவியைவிட கள்ளக் காதலியைத்தான் பலருக்கு பிடிக்குமாம். அதற்கு பல காரணங்கள். ஆனால் கூடவே மனைவியும் வேண்டும், கள்ளக்காதலியும் வேண்டும் என கதறும் கணவன்களும் அதிகரிக்கதான் செய்கிறார்கள்.அதே சமயம் காதலியும் கள்ளக் காதலனுடன்தான் வாழ்வேன் என அடம் பிடிக்கும் போக்கும் நிலவுகிறது.இதனிடையே காதலையும், கள்ளக்காதலையும் வளர்ப்பதில் கைப்பேசி முதல் இடத்தை பிடித்துள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இன்றைய மாடர்ன் உலகின் தகவல் தொடர்பில் கைபேசி என்படும் செல்போனில் இ,மெயில், சமூக இணை தளங்கள், வாட்ஸ் அப் என பல உள்ளன. இருந்தாலும் இவற்றில் பெரும்பாலானோர் அதிகம் உபயோகிப்பதில் முதல் இடத்தைப் பிடிப்பது செல்போன்தான். காரணம் 24 மணி நேரமும் எளிதில் தொடர்பு கொள்ளும் வசதி. சிக்கனமான தகவல் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்தியது கைப்பேசி என்றே சொல்லலாம். சி.யு.ஜி, பூஸ்டர், எஸ்.எம்.எஸ் பூஸ்டர் என பல வசதிகளால் பலர் எந்நேரமும் செல்போனை காதில் வைத்தபடியே உள்ளனர், அதிலும் இளம் தலைமுறையினர் இரண்டு கட்டை விரலில் மின்னல் வேகத்தில் டைப் அடித்து எஸ்.எம்.எஸ் அனுப்பி கொண்டே இருக்கின்றனர். இந்த கைப்பேசி வரவால் அதிகம் பயன் அடைபவர்கள் காதலர்களும், கள்ளக்காதலர்களும் தான்.

”உங்கள் காதலை வளர்க்க எத்தகைய முறையை பின்பற்றுகிறீர்கள்?’’ என தனியார் நிறுவனம் ஒன்று வயது வந்த ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு நடத்தியது. திருமணம் ஆகாதவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 63 சதவீத பெண்களும், 56 சதவீத ஆண்களும் கைப் பேசியை பயன்படுத்துவதாக கூறியுள்ளனர். 25 சதவீத பெண்கள் மட்டுமே பழைய முறையான நேரில் சந்திப்பதை பின்பற்றுவதாக கூறியுள்ளனர். 12 சதவீதம் பெண்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதாக கூறியுள்ளனர். திருமணம் ஆகாத ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 43 சதவீதம் பேர் கைப்பேசியை பயன்படுத்துவதாகவும், 32 சதவீதம் பேர் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதாகவும், 25 சதவீதம் நேரில் சந்தித்து கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

திருமணம் ஆனவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 39 சதவீத பெண்கள் கைப்பேசியை பயன்படுத்துவதாகவும், 32 சதவீதம் பேர் நேரில் சந்தித்து கொள்வதாகவும், 28 சதவீதம் பேர் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். காதல் மற்றும் கள்ளக்காதலை ரகசியமாக வளர்ப்பதில் கைப் பேசி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது இந்த சுவாரஸ்யமான ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.