Latest News

6 மாதத்தில் 67 பெண்களுடன் உல்லாசம் வீடியோ வெளியானால் பிடிபட்ட சிவராஜ்


தர்மபுரி அருகே உள்ள பாலக்கோடு மந்தை வெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (42). வட்டிக்கு பணம் கொடுக் கும் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். இவரது செல் போன் திடீரென பழுதானது. அதனை பாலக்கோடு பகுதியில் உள்ள ஒரு  சர்வீஸ் சென்டரில் கொடுத்தார். அப்போது அதை சர்வீஸ் செய்த ஊழியர் மெமரி கார்டை பார்த்தார். அதில் சிவராஜ் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ இருந்தது. அதனை செல்போன் சர்வீஸ் கடை ஊழியர்  பதிவு இறக்கம் செய்து கொண்டார்.

அதை நண்பர்களுக்கும் பின்னர் சி.டி.யாகவும், பென்டிரைவ்விலும் காப்பி செய்து கொடுத்தார். இந்த வீடியோ பாலக்கோடு முழுவதும் வேகமாக பரவியது.

இதுபற்றி தெரியவந்ததும் போலீசார்  விசாரணையில் இறங்கினர். அப்போது  இந்த ஆபாச படங்கள் செல்போன் சர்வீஸ் செய்யும் கடையில் இருந்து பெறப்பட்டது தெரியவந்தது. போலீசார் அங்கு விசாரித்தபோது கடை ஊழியர், சிவராஜ் செல்போனில் இருந்து அவை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து  ஆபாசபடம் எடுத்தல், தொழில்நுட்ப மோசடி ஆகிய  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நிதி  நிறுவன அதிபர் சிவராஜை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.


பாலக்கோடு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான  பெண்கள் வட்டிக்கு பணம் கேட்டு சிவராஜியிடம் வந்து இருக்கிறார்கள். இதை பயன் படுத்தி கொண்ட அவர் தன் இச்சைக்கு அவர்களை உள்ளாக்கினார். குப்பன் கொட்டாய் என்ற பகுதியில் சிவராஜிக்கு சொந்தமான 10 ஏக்கர் மாந்தோப்பு இருக் கிறது. இங்கு ஒரு பண்ணை வீடு இருக்கிறது.
பணம் கேட்டு வரும் பெண்களை சிவராஜ் இங்கு அழைத்து வந்து அவர்களுடன் உல்லாசமாக  இருந்து வந்தார். அந்த நேரத்தில் அந்த பெண்களுக்கு தெரியாமல் உல்லாச காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்து உள்ளார். கடந்த 6 மாதத்தில் 67 பெண்களை தனது வலையில் வீழ்த்தியது தெரியவந்தது. 27 பெண்களுடன் சிவராஜ் இருக்கும் வீடியோவை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

பெண்களுடன் உல்லாசமாக இருந்த காட்சிகளை சிவராஜ் தனியாக தனது செல்போனில் பார்த்து ரசித்து வந்திருக்கிறார். அப்போது தான் செல்போன் பழுதாகி சர்வீசுக்கு சென்ற போது வசமாக சிக்கி  கொண்டார்.

நிதிநிறுவன அதிபர் சிவராஜ் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ தற்போது பாலக்கோடு பகுதியில் பரவி வருகிறது. இதனால் சிவராஜுடன் தொடர்பில் இருந்த  பெண்கள் கலக்கத்தில் உள்ளனர். தங்களது வீட்டில் தெரிந்து விட்டால் என்ன செய்வது  என்று தவித்து வருகிறார்கள். வீடியோவில் உள்ள எந்த பெண்களும் புகாரும் செய்யவில்லை. எனவே போலீசார் அனைத்து ஆபாச கேசட்டுகளையும் பறிமுதல் செய்யும் முயற்சியில் இறங்கி யுள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.