நிதி தேவையில்லை எங்களுக்கு நீதி தான் வேண்டும் என்று உத்திரபிரதேசத்தில் உயிரிழந்த சிறுமியின் தந்தை கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலம் படான் மாவட்டலுள்ள கத்ரா கிராமத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய தலித் சிறுமிகள் கற்பழித்து தூக்கிலிட்டு கொலைசெய்யப்பட்டனர்.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, இதுவரை, பொலிசார் உள்ளி்ட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொலைசெய்யப்பட்ட சிறுமிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கொலை செய்யப்பட்ட சிறுமிகளில் ஒருவரின் தந்தை இழப்பீட்டு தொகையை ஏற்க மறுத்து விட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனது பெண் கொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டும். இழப்பீடு தேவையில்லை. இக்கொகடூர குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து அந்த இரண்டு பெண்கள் எவ்வாறு அவர்களால் தூக்கிலிடப்பட்டார்களோ அதே போன்று அவர்களையும் தூக்கிலிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment