Latest News

  

பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என வகுப்பறைக்கு வெளியே நிறுத்தியதால் மாணவி தற்கொலை போலீசில் தந்தை புகார்



பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி வகுப்பறைக்கு வெளியே நிறுத்தியதால் மனம் உடைந்த மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர்.

வெளியே நிறுத்தினார்

மணலி சி.பி.சி.எல். நகர், 9-வது தெருவை சேர்ந்தவர் மாறன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பொற்கொடி. இவர்களது மகள் பூஜா(வயது 13). இவள், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

பூஜா, நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றாள். ஆனால் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி மாணவி பூஜாவை வகுப்பு ஆசிரியை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தியதாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிய பூஜா, இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி அழுதாள். திங்கட்கிழமை கண்டிப்பாக பள்ளி கட்டணம் செலுத்தி விடுவதாக அவளை பெற்றோர் சமாதானம் செய்து வைத்தனர்.

ஆனாலும் சமாதானம் அடையாமல் மனமுடைந்து காணப்பட்ட மாணவி பூஜா, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

போலீசில் புகார்

இதுபற்றி மணலி போலீசில் மாறன் புகார் செய்தார். அதில், “எனது மகளை பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி வகுப்பறைக்கு வெளியே நிறுத்தியதால் மனம் உடைந்த அவள் தற்கொலை செய்து கொண்டாள். அவளது சாவுக்கு காரணமான பள்ளி வகுப்பு ஆசிரியை, தலைமை ஆசிரியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி” கூறி இருந்தார்.

நேற்று பள்ளிக்கு விடுமுறை. ஆனாலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த சகமாணவிகளின் பெற்றோர் நேற்று காலை பள்ளிக்கூடம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மணலி போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி மேலும் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.