Latest News

கொடிய அயோக்கியனால் ஆசிட் வீசிக் கொல்லப்பட்ட காரைக்கால் இஞ்சினீயரிங் கல்லூரி மாணவி வினோதினியின் தந்தை - ஜெயபாலனின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் இஸ்லாம்..!

“என் மகள் வாழ்க்கையைச் சிதைத்து 
சின்னாபின்னமாக்கிய அவனுக்குத் 
தூக்கு தண்டனை கொடுத்தால்
ஒரு நொடியில் உயிர் போய்விடும்.
அது போதாது... என் மகளைப் போல்
அவனும் வேதனையை அனுபவிக்க வேண்டும்.”

இப்படிச் சொன்னவர்
விநோதினியின் தந்தை ஜெயபாலன்.

ஜெயபாலனின் உணர்வுக்கு
மதிப்பளிக்கும் ஒரே மார்க்கம்
இஸ்லாம்தான்.


ஒருவேளை ஷரீஅத் நீதிமன்றத்தில்
இந்த வழக்கு நடைபெறுவதாக வைத்துக்கொள்வோம்.

விநோதினி எப்படிக் கொல்லப்பட்டாரோ
அதே முறையில்தான் குற்றவாளியும்
கொல்லப்படவேண்டும்
என்று ஷரீஅத் தீர்ப்பளிக்கும்.

பாதிக்கப்பட்ட ஜெயபாலனின்
உணர்வுகளுக்குத்தான்
இறைநெறி இஸ்லாம் மதிப்பளிக்கிறது.

தமது மகளைக் கொடூரமாகக்
கொலை செய்த குற்றவாளியும்
அதே போல் கொல்லப்படவேண்டும்
எனும் அவருடைய
நியாயக் குரலுக்குத்தான் ஷரீஅத் மதிப்பளிக்கிறது.

‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்,
கொலைக்குக் கொலை என்பதெல்லாம்
காட்டுமிராண்டித்தனம்’ என்று வக்கணை பேசும்
மனித உரிமைவாதிகள் இப்போது
விநோதினியின் தந்தை ஜெயபாலனைப் பார்த்து
‘நீ ஒரு காட்டுமிராண்டி’ என்று சொல்வார்களா?


மனித உணர்வுகளுக்கேற்ற
மார்க்கம் இஸ்லாம்தான்
என்பதை நம்நாட்டு மனித உரிமைவாதிகள்
புரிந்துகொண்டால் சரிதான்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.