Latest News

  

அல்லாஹ்வின் இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் !?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

2:114   وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا ۚ أُولَٰئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ ۚ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ

2:114. அன்றி அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவைகளைப் பாழாக்க முயற்சிப்பவனைவிட பெரிய அநியாயக்காரன் யார்? அச்சத்துடனன்றி அவைகளில் நுழைய அவர்களுக்கு உரிமையே இல்லை. (அவ்வாறிருக்க அதற்கு மாறாக நடக்கும்) அவர்களுக்கு இவ்வுலகில் இழிவுதான். மறுமையிலோ கொடிய வேதனை உண்டு.

நேற்று மாலை (30-04-2013) தக்வா பள்ளியில் இதற்கு முன்னர் நடந்திராத ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.

பள்ளிவாசலின் மோதினாரையும் அவருடைய  மற்றொரு உதவியாளரையும் திடீரென்று பள்ளிவாசலின் மைக் வைத்திருக்கும் அலமாரியை பெட்டிச் சாவியுடன் மஃக்ரிப் நேரத்திற்கு சற்று முன்னிருந்து இஷா தொழுகை முடியும் வரை அங்கே காணவில்லை.  இதனால் இரண்டு தொழுகைகளுக்கும் குறித்த வக்திற்குள் பாங்கு சொல்லப்படவில்லை. மற்ற பள்ளிவாசல்களை விட பல நிமிடங்கள் கழித்து, பொறுப்பு யாரிடமும் ஒப்படைக்கப்படாத நிலையில் மோதினாருக்காக காத்திருந்து அவர் வராத நிலையில் அங்கிருந்த சகோதரர் ஒருவரால் சற்று கால தாமதத்திற்கு பின் பாங்கு சொல்லப்பட்டது. அதுவும் மைக் ஒலி பெருக்கி இல்லாமல் சொல்லப்பட்டது. இது ஒருவேளை எதேச்சையாக கூட நிகழந்திருக்கலாம் என்று விட்டுவிடவும் முடியவில்லை.

சில நாட்களுக்கு முன் ஹைதர் அலீ ஆலிம் அவர்கள் பயான் சம்பந்தமாக சுமூக முடிவு ஏற்பட்டு ஒலி பெருக்கியில் வழக்கம் போல் பயான் நடந்த நிலையில் நம்மில் சில சகோதரர்களால் ஒலிபெருக்கியில் பயான் நடை பெறுவதை தடை செய்யும் முகமாக தங்களின் பலத்தை பிரயோகித்து மோதினாரையும் அவர் உதவியாளரையும் ஒலிபெருக்கி இருக்கும் அலமாரியின் சாவியுடன்  அங்கிருந்து அகன்று கொள்ளும்படி வேண்டப்பட்டதா அல்லது எதேச்சையான நிகழ்வா? என்று சந்தேகிக்கும் முகாந்திரம் அதிகமுள்ளது. ஒருவேளை அவர்களுக்கு அவசியமான வேலைகள் இருக்கும் பட்சத்தில் அந்த பொறுப்பை தற்காலிகமாக யாரிடமும் ஒப்படைக்கப்படாமல் பயான் வழக்கமாக நடைபெறும் தினத்தன்று இவ்வாறு நடக்க என்ன காரணம்?

தங்களின் அதிகாரப் பெருமையை நிலை நிறுத்துவதற்காக, அல்லாஹ்வுக்கு எதிரான போரில் இறங்கியிருப்பவர்கள் யார்?

2:114   وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا ۚ أُولَٰئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ ۚ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ

2:114. அன்றி அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவைகளைப் பாழாக்க முயற்சிப்பவனைவிட பெரிய அநியாயக்காரன் யார்? அச்சத்துடனன்றி அவைகளில் நுழைய அவர்களுக்கு உரிமையே இல்லை. (அவ்வாறிருக்க அதற்கு மாறாக நடக்கும்) அவர்களுக்கு இவ்வுலகில் இழிவுதான். மறுமையிலோ கொடிய வேதனை உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன் அ.ஜ. பள்ளியில் ஒலிபெருக்கியில் பாங்கு சொல்வதை ஆர்.எஸ்.எஸ்.  காரர்கள் தடை செய்தபோது பொங்கியெழுந்த இளைஞர்களும், சமுதாய உணர்வு மிக்கவர்களும் இந்த விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

இப்படியே போனால் அல்லாஹ்வின் இறை இல்லத்தை இழுத்து மூட ஒத்திகை பார்க்கிறார்களா நம் சகோதரர்கள்?

அன்புக்குரிய இளைஞர்களே, சகோதரர்களே, உங்களுடைய உறவினர்களும் நண்பர்களும் உங்களைப் பற்றி பழிச்சொல் பேசுவார்கள் என்று அஞ்சி அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலை நிறுத்த தவறினால், அல்லாஹ்வுடைய தீனின் கண்ணியத்தை, அல்லாஹ்வுடைய இல்லத்தின் கண்ணியத்தை காக்க தவறினால், அல்லாஹ்வுடைய புனித அடையாலங்கலான அவன் மகத்துவம், அவனுடைய ஏவல், விலக்கல்கள் பற்றி பேசப்படுவதை, கண்ணியப்படுத்தி பாதுகாக்க தவறினால், அல்லாஹ்  நம்மை என்ன செய்வான் என்ற கீழ்காணும் எச்சரிக்கையை அஞ்சிக் கொள்ளுங்கள்.

5:54   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ۚ ذَٰلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ ۚ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

5:54. நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்தில் இருந்து மாறிவிட்டால் (அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்றுமில்லை. உங்களைப்போக்கி) வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; நிராகரிப்பவர்களிடம் கண்டிப்புடையவர்களாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவார்கள். பழிப்பவனின் பழிப்பை அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன் விரும்பியவர்களுக்குத்தான் இதனை அளிக்கின்றான். அல்லாஹ் மிக விசாலமானவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

9:24   قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ

9:24. (நபியே! நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: உங்களுடைய தந்தைகளும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிகளும், உங்களுடைய குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் (உங்கள்) பொருள்களும், நஷ்டமாகிவிடுமோ என நீங்கள் பயந்து (மிக எச்சரிக்கையுடன்) செய்து வரும் வர்த்தகமும், உங்களுக்கு மிக்க விருப்பமுள்ள (உங்கள்) வீடுகளும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விடவும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவதைவிடவும் உங்களுக்கு மிக விருப்பமானவைகளாக இருந்தால் (நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களல்ல. நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் நீங்கள் எதிர்ப்பார்த்திருங்கள். (உங்களைப் போன்ற) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை.

உலகெங்கும் ஆங்காங்கே முஸ்லிம்கள் படும் வேதனை அதிரையையும் தொட வேண்டுமா? அந்தோ நாம் செயல்படாமல் இருந்து விட்டோமே என்று காலதாமதமாகி கதறும்முன் செயல்படுவோம் வாருங்கள்.

 அல்லாஹ் கூறுகிறான் :

7:3   اتَّبِعُوا مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ ۗ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ

7:3. (மனிதர்களே!) உங்களுக்காக உங்கள் இறைவன் அருளியதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்குக்) பொறுப்பாளர்(களாக ஆக்கி, அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (எனினும், இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உங்களில் மிகக் குறைவு.

7:4   وَكَم مِّن قَرْيَةٍ أَهْلَكْنَاهَا فَجَاءَهَا بَأْسُنَا بَيَاتًا أَوْ هُمْ قَائِلُونَ

7:4. (பாவிகள் வசித்திருந்த) எத்தனையோ நகரங்களை நாம் அழித்திருக்கின்றோம். அவற்றில் இருந்தவர்கள் இரவிலோ, பகலிலோ நித்திரையில் இருக்கும்பொழுது நம்முடைய வேதனை அவர்களை வந்தடைந்தது.

7:5   فَمَا كَانَ دَعْوَاهُمْ إِذْ جَاءَهُم بَأْسُنَا إِلَّا أَن قَالُوا إِنَّا كُنَّا ظَالِمِينَ

7:5. அவர்களிடம் நம்முடைய வேதனை வந்த சமயத்தில் "நிச்சயமாக எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாகி விட்டோம்" என்று கூறியதைத் தவிர வேறொன்றும் அவர்கள் கூறவில்லை.

7:6   فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ

7:6. ஆகவே (இதைப் பற்றி நம்முடைய) தூதர்களையும், அவர்களை எவர்களிடம் அனுப்பி வைத்தோமோ அவர்களையும் நிச்சயமாக நாம் விசாரணை செய்வோம்.

7:7   فَلَنَقُصَّنَّ عَلَيْهِم بِعِلْمٍ ۖ وَمَا كُنَّا غَائِبِينَ

7:7. (அப்போது அவர்களின் செயல்களை) நாம் நிச்சயமாக அவர்களுக்கு உறுதியுடன் விவரிப்போம். நாம் மறைவானவர்களாக இருக்கவில்லை.

நம்முடைய இரட்சகனாகிய அல்லாஹ் நமக்கு எல்லாவித எச்சரிக்கைகளையும் தெளிவாகவே சொல்லிவிட்டான். இனி நமது பொறுப்பு

கடைசியாக கிடைத்த தகவல்:

மோதினாரை அசருக்குப் பின் "ஒரு தரப்பினர் மைக் போட சொல்கிறார்கள், மற்றொரு தரப்பினர் மைக் போட வேண்டாம் என்று சொல்கிறார்கள், எனவே ராஜினாமா செய்கிறேன்" என்று சொல்லச் செய்து அவரை அங்கிருந்து போகும்படி செய்ததுடன், அவருடைய உதவியாளரையும் அங்கிருந்து செல்லும்படி செய்திருக்கிறார் பள்ளியின் தற்போதைய தலைவர். மஃக்ரிப் தொழுகைக்கு சிறிது நேரத்திற்கு முன் அவர் அங்கு வந்து மைக் இருக்கும் அலமாரியை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போயிருக்கிறார். சாவி வைத்திருக்கும் நபரும் தொழுகைக்கு வராமல் மறைந்து கொண்டு பழியை சத்தியப் பிரச்சாரம் செய்பவர்களின் மீது சுமத்த சூழ்ச்சி செய்கிறார்களா?   

35:44   أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَكَانُوا أَشَدَّ مِنْهُمْ قُوَّةً ۚ وَمَا كَانَ اللَّهُ لِيُعْجِزَهُ مِن شَيْءٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ ۚ إِنَّهُ كَانَ عَلِيمًا قَدِيرًا

35:44. இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? மேலும் அவர்கள் வலிமையில் இவர்களைவிட மிக்கவர்களாக இருந்தனர்; வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்; பேராற்றலுடையவன்.

அபூ முஸ்அப்

சற்று நேரத்திற்கு முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலில், நேற்று மைக் ரிப்பேர் ஆனதால் அதனைச் சரி செய்யப்பட்டு இன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டதாக பள்ளியின் நிர்வாகச் செயலாளர் தெரிவித்திருக்கிறார். இன்றும் மஃப்ரிப் மற்றும் இஷா தொழுகைக்கு மைக்கில் பாங்கு சொல்லப்படவில்லை.

நன்றி : அதிரைநிருபர் 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.