Latest News

  

பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 2240 சப் – இன்ஸ்பெக்டர் பணிகள்!


மத்திய அரசு துறைகளில் பலதரப்பட்ட பணிகளுக்கும் தகுதியானவர்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.) தேர்வு செய்கிறது. தற்போது மத்திய காவல் பிரிவுகளான டெல்லி போலீஸ், மத்திய அதிரடிப்படை (சி.ஏ.பி.எப்), தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.), போதை தடுப்பு பிரிவு (என்.சி.பி.) ஆகியவற்றில் சப்–இன்ஸ்பெக்டர், துணை சப்–இன்ஸ்பெக்டர் போன்ற பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

10–6–13 அன்று இதற்கான தேர்வு நடக்கிறது. இந்த தேர்வின் மூலம் மொத்தம் 2 ஆயிரத்து 240 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர் –பணியிடங்கள்

சப்–இன்ஸ்பெக்டர் (சி.ஏ.பி.எப்.) – 1176

சப்–இன்ஸ்பெக்டர் (டெல்லி போலீஸ்) – 330

அசிஸ்டனட் சப்–இன்ஸ்பெக்டர்/ எக்சி (சி.ஐ.எஸ்.எப்.) – 734

வயது வரம்பு
1–1–13 தேதியில் விண்ணப்பதாரர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் பட்டப் படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்/ஆளுமைத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அத்துடன் உடற்தகுதி, உடற்திறன் சோதிக்கப்படுவதுடன், மருத்துவப் பரிசோதனையும் நடைபெறும்.

உடற்தகுதி
விண்ணப்பதாரர் ஆண்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ. உயரமும், மார்பளவு 80–85 செ.மீ. என்ற அளவிலும் இருக்க வேண்டும். எஸ்.டி. பிரிவினர் 162.5 செ.மீ. உயரமும், மார்பளவு 77–82 செ.மீ. இருந்தால் போதுமானது.

பெண் விண்ணப்பதாரர்கள் எஸ்.டி. பிரிவினர் 154 செ.மீ. உயரமும், மற்றவர்கள் 157 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்.

பார்வைத்திறன் 6/6 மற்றும் 6/9 என்ற அளவில் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர், முன்னாள் படை வீரர்கள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

கட்டணம் செலுத்துவோர் மத்திய ஆளெடுப்பு அஞ்சல் முத்திரையாக கட்டணத்தை இணைக்க வேண்டும். அல்லது ஸ்டேட் வங்கியில் செலான் மூலம் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் ‘ஸ்டாப் செலக்சன் கமிஷன்’ ஆணையத்தின் இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பார்ட்1, பார்ட்2 என இரு பிரிவாக உள்ளது. ஒன்றன்பின் ஒன்றாக நிரப்பி அனுப்ப வேண்டும். பார்ட் 1 விண்ணப்பம் 10–4–13–ந்தேதிக்குள்ளும், பார்ட்–2 விண்ணப்பம் 12–4–13–ந் தேதிக்குள்ளும் அனுப்ப வேண்டும்.

‘ஆப்லைன்’ முறையிலும் (தபால் மூலம்) இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்பப் படிவம் தயாரித்து அதை நிரப்பி குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழக விண்ணப்பதாரர்கள் தபால் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:–

Regional Director (NER)
Staff Selection Commission
EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai, Tamilnadu- 600006

முக்கிய தேதிகள்
ஆன்லைனில் பார்ட்–1 விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் : 10–4–13

பார்ட்–2 விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் : 12–4–13

தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் : 12–4–13

மேலும் விரிவான விவரங்களை அறிய http://ssconline.nic.in/ என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.
நன்றி : முஜிபு. காம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.