Latest News

மாணவ, மாணவியரின் பெற்றோர் உஷாராக இருந்தால் மட்டுமே, பிரச்னைகளை தவிர்க்க முடியும்


தமிழகத்தில் ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி.பொதுத் தேர்வு முடியும் நிலையில்மாணவமாணவியர் வீட்டை விட்டு ஓடுவதுசில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. மாணவியர்,தங்களின் காதலர்களாகிய மாணவர்கள்இளைஞர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி வீட்டை விட்டும்பெற்றோரை தவிக்க விட்டும்சென்று விடுகின்றனர். போலீசாரின் கணக்கெடுப்பின் படிகடந்த ஆண்டில் பொதுத் தேர்வு முடிவுற்ற நிலையில்தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி மாணவியரில், 125 பேர்காதலர்களுடன் ஓட்டம் பிடித்தனர். இதில்பல மாணவியர்போலீஸ் வலையில் சிக்கினர். இவ்வாறு சிக்கியவர்களின் பெற்றோரை அழைத்து,பேச்சுவார்த்தை மட்டுமின்றிமாணவியருக்கு ஆலோசனை வழங்கிய நிலையில்அவர்கள் மீண்டும்பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மாணவமாணவியர் தேர்வு எழுதி முடிக்கும் நிலையில்,அவர்களின் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக அவர்களுக்குபிரத்தியேகமாக வீடுகளில் அறைகள் இருக்கும் பட்சத்தில்அவற்றை கண்காணிக்க வேண்டும். விலை உயர்ந்த நகைகள்பணம்வங்கியின் ஏ.டி.எம்.கார்டு,செக் புத்தகம் ஆகியவற்றை பத்திரமாக மாணவ,மாணவியருக்கு தெரியாத வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வு முடியும் நிலையிலும்முடிந்த பின்னரும் அவர்களின் தோழிகள்பழக்கமானவர்களையும் தொடர்ந்து கண்காணிக்கலாம். மாணவமாணவியர் பணம் கேட்கும் பட்சத்தில்அந்த பணத்துக்கான தேவை குறித்தும்அதன் அவசியம் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாணவனோமாணவியோ காணவில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிப்பதோடுஅவர்களின் புகைப்படங்களை வழங்கி உதவலாம். அவர்களின் பழக்க வழக்கங்கள்தொடர்புகள் குறித்து முழு விவரங்களையும்போலீசாரிடம்எவ்வித தயக்கமும் இன்றி தெரிவித்தால்நடவடிக்கை எடுக்க உதவி கரமாக இருக்கும். பள்ளி தேர்வு முடிவுக்கு வரும் நிலையில்,மாணவமாணவியரின் பெற்றோர் உஷாராக இருந்தால் மட்டுமேபிரச்னைகளை தவிர்க்க முடியும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.