மாதத்தின் முதல் திகதியே
ஏன் பிறந்தாய்
வட்டிக்காரன் வாசலிலே
வசைபாடி நிற்கின்றான்
கேபிள் காரனவன்
கொடுக்கின்றான் பெரும் செலவை
பாலுக்கு மணியடித்து
அழைக்கும் பால்க்காரன்
பணம் கேட்டு அழுகின்றான்
நர்சரி பள்ளிக்கு
நலமாக செல்லும் பிள்ளை
தயங்கி போக மறுக்கிறது
ஆசையாக வாங்கி வந்த
தவணை திட்டம் பொருட்களுக்கு
தந்து விட்டான் எச்சரிக்கை
தவணை கட்டாது
போகுமாயின் பொருட்களையும்
எடுத்து சென்றிடுவேன்
என்று மிரட்டுகிறான்
இதற்கிடையே வீட்டுக்காரன்
வாடகை என்ன ஆச்சு என்று
இருமளால் சைகை காட்டிவிட்டான்
ஏன் பிறந்தாய் முதல் திகதியே
நிம்மதியை குலைப்பதற்கா
ஏன் பிறந்தாய்...?
[முதல் தேதியின் பதில் அடுத்த ஆக்கத்தில் ]
ஏன் பிறந்தாய் தொடரும்...
அதிரை சித்திக்
No comments:
Post a Comment